For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் திறக்கக் கோரியும் தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. மின்வெட்டைக் கண்டித்து கடந்த வாரம் கோவையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி பகுதிகளில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 400 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பலபகுதிகளில் மின்வெட்டை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

English summary
Merchants in Tuticorin district have shutdown their shops to condemn powercut and to insist the government to open the Kudankulam nuclear power plant soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X