கொள்ளையர்கள் என நினைத்து 2 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள்
Subscribe to Oneindia Tamil

இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆலப்புழையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது கடலில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இத்தாலி கப்பல்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.
கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications