கிங் பிஷர் விமானங்கள் திடீர் ரத்து- விசாரணைக்கு உத்தரவு

கிங் பிஷர் நிறுவனம் எதுவித முன்னறிவிப்பும் இன்றி விமான சேவைகளை ரத்து செய்தது விதி மீறலாகும். இதனால் கிங் பிஷர் நிறுவனத்துக்கான விமான சேவை அனுமதியை ரத்தும் செய்யலாம் என்கிறது விதி.
இருப்பினும் கிங் பிஷர் நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
விமான சேவையை தமது நிறுவனம் ரத்து செய்யவில்லை என்றும் இனந்தெரியாத சில பறவைகள் விமானங்கள் மீது மோதி சேவையை முடக்கிவிடுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தற்காலிகமானதுதான் என்றும் எதிர்வ்ரும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்றும் கிங் பிஷர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் நட்டத்தில் இயங்கும் கிங் பிஷர் நிறுவனம் மீண்டும் அதிரடி கட்டணக் குறைப்பு அறிவிப்பை வெளியிடக் கூடும் என்றும் வெளியான செய்திகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
இதேபோல் விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக வெளியான செய்திகளையும் கிங் பிஷர் நிறுவனம் நிராகரித்துள்ளது. விமான எரிபொருளுக்கு கட்டண பாக்கி, நட்டத்தில் இயங்கியதால் விலகிய பைலட்டுகள் என பஞ்சப்பாட்டில் தொடர்ந்து சிக்கி வருகிறது சொகுசு தொழிலதிபர் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம்.












Click it and Unblock the Notifications