கொலை மிரட்டல் வழக்கு: கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

Subscribe to Oneindia Tamil

KN Nehru
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவைப் பிடிக்க 6 தனிபப்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் குற்றாலம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணத்தை சந்திக்க முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திருச்சி நகர செயலாளர் அன்பழகன் உள்பட பலர் நேற்று காரில் திருச்சி மத்திய சிறைக்கு சென்றனர். அங்கு காரை சிறை வளாகத்திற்குள் அனுமதிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

அப்போது சிறைக் காவலர் வீரமணயை காரில் சென்றவர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகின்றது. இது குறித்து வீரமணி கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கே.என்.நேரு, பூண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ், அன்பழகன் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று மாலை பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகள், லால்குடியிலுள்ள மில், காணக்கினிய நல்லூரிலுள்ள வீடு ஆகிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியும் நேரு கிடைக்கவில்லை. ஆனால் சிறைக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட கார் கிடைத்தது. உடனே அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+