For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 11 ராணுவத்தினர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

Avalanche
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 11 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

பந்திப்போரா மாவட்டத்தில் 8 பேரும் கந்தர்பால் மாவட்டத்தில் 3 பேரும் பனிச்சரிவில் புதையுண்டு போயுள்ளனர். கடந்த இரண்டுநாட்களாக காணாமல்போன 8 பேரும் பனிச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப். கர்னல் ப்ரார் கூறியதாவது:

பந்திப்போராவில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காணாமல் போயுள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

8 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கந்தர்பாலில் 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவத்தினருக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

English summary
Eleven army personnel were killed and eight are missing in two overnight avalanches in Jammu and Kashmir, an army official said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X