மின்சாரத்தை வீணடிக்க விரும்பவில்லை: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் ஐ.ஜே.கே.
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று இந்திய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் நாங்களும் ஈடுபட்டு மின்சாரத்தைச் தேவையின்றி செலவு செய்ய விரும்பவில்லை. பொதுத் தேர்விற்காக தயாராகும் மாணவர்களுக்கு, இடையூறு ஏற்படுத்துவதையும் தவிர்க்க விரும்புகின்றோம்.
மேலும் இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதால், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications