ராஜபாளையம் அருகே கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலை அடுத்த ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கார் ஒன்றை சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் சிக்கியது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சோலைசேரி கிராமம் உள்ளது. இங்கு இடைத்தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பறக்கும் படை தாசில்தார் முகம்மது ஜாகிர்உசேன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கார் ஒன்றில் சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காரை அதிகாரிகள் சோதனையிட்ட போது ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணம் இருந்தது. இது குறித்து பறக்கும் படையினர் விசாரித்த போது, கணேசன் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications