லேப்டாப் நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் அரசியல் கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

Laptop
பெங்களூர்: உத்தரபிரதேசம், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளால் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி மதிப்பிற்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..

2006-ஆம் ஆண்டு வரைமாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரிசி, மிதிவண்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்கின.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்றவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10,200 கோடி மதிப்புள்ள 68 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கக் கூடும். முதல் கட்டமாக ரூ.1,300 கோடிக்கு 10 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு லெனோவா மற்றும் எச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆர்டர்களை அளித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவோருக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் கோவாவில் பாரதிய ஜனதாவும், பஞ்சாபில் சிரோமணி அகாலிதள கட்சியும் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடு சரிவை சந்தித்திருந்த லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனி வரும் ஆண்டுகளில் அரசியல் கட்சிகளே கை கொடுக்க உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+