கரைதிரும்பிய 22 மீனவர்களை மடக்கி கைது செய்தது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாமஸ், முருகேசன், ரமேஷ் உள்ளிட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிய மீனவர்கள் இத்தகவலைத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையின் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் 5 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பறித்துச் சென்றுள்ளது.
ஏற்கெனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலரும் இன்னமும் கஞ்சா வழக்கின் கீழ் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தொடரும் சிறைபிடிப்பு நடவடிக்கையால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications