நான் அருணாச்சல் பிரதேசம் போனதை சீனா எப்படி விமர்சிக்கலாம்-ஏ.கே. அந்தோணி கண்டனம்
டெல்லி: அருணாசலப்பிரதேசத்துக்கு தான் பயணம் மேற்கொண்டது தொடர்பாக சீனா அதிருப்தி வெளியிட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
அருணாசலப் பிரதேசமும் ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பயணம் செய்வது எனது கடமையும் உரிமையும் கூட.
ஆனால் சீனாவின் இத்தகைய ஆட்சேபனை ஆச்சரியமளிக்கிறது. துரதிர்ஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
1984-ம் ஆண்டிலிருந்தே அருணாசலப்பிரதேசத்துக்கு நான் பயணம் செய்து வருகிறேன். அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருணாசலப்பிரதேசம் இப்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் எதிர்ப்பு
நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதம் பொருத்துவதற்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ள எதிர்ப்பு அர்த்தமற்றது. நாட்டைப் பாதுகாக்கத்தான் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறதே தவிர போருக்கு அல்ல.
இந்தியாவின் பாதுகாப்பை வலிமைப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் அவசியமோ அதை இந்தியா மேற்கொள்ளும் என்றார் அவர்.
சீனாவின் கருத்து
அருணாசலப்பிரதேசத்தில் அந்தோணி சுற்றுப் பயணம் செய்ததன் மூலம் இருநாட்டு எல்லை சிக்கலை இந்தியா தீவிரப்படுத்துகிறது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கூறி வரும் விஷமம் பிடித்த சீனா, அருணாச்சல் பிரதேசத்திற்கு யார் போனாலும் தாம் தூமென்று குதித்து பிரச்சினையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications