For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இஸ்ரேல் தூதரக கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி ரயில் நிலையத்தில் வைத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த 2 பேரும் ஜார்க்கண்ட் வழியாக டெல்லி வந்துள்ளனர். அவர்கள் டெல்லிக்குள்ள வந்ததில் இருந்தே உளவுத்துறை அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்தது.

தனிப்படையினர் இந்த கைது குறித்து வாய் திறக்காவிட்டாலும் அந்த 2 பேரிடம் இருந்து பல முக்கியமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் விவிஐபிக்களையும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதிகளையும் தாக்கும் திட்டத்தோடு டெல்லி வந்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.

English summary
Two suspected Laskhar-e-Taiba militants have been arrested in New Delhi on Wednesday. The militants were found at a railway stations. Huge explosives have been recovered from them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X