ஜெ. வருகைக்காக திருவேங்கடத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி மும்முரம்

நடைபெற்று வருகிறது.
தேர்தல் திருவிழா
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஆதரித்து அக்கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.
மார்ச் 13-ல் ஜெ. பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா மார்ச் 13ந் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். சென்னையிலிருநது ஹெலிகாப்டர் மூலம் திருவேங்கடம் வரும் முதல்வர் ஜெயலலிதா ராஜபாளையம் தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் குருவிகுளம் ஒன்றியத்தில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
முதல்வர் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க திருவேங்கடத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications