இந்தியா-சீனா பேச்சுக்கு எதிர்ப்பு: டெல்லியில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்ட்டம்
டெல்லி: எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஐதரபாத் இல்லம் முன்பாக திபெத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்பது திபெத்தியர்களின் முழக்கம்
டெல்லி வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யங் ஜியேச்சியுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐதராபாத் இல்லம் முன்பு திபெத்தியர்கள் ஒன்று திரண்டனர். திபெத்துக்கு சுதந்திரத்தை வழங்கிவிட்டு இந்தியாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பட்டம் நடத்தியதாக ஒரு பெண் உட்பட 15 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு குண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications