சங்கரன்கோவில்: ரஜினி ரசிகர் மன்றம், கார்த்திக் கட்சியின் வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிப்பு!

சங்கரன்கோவிலில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது. மொத்தம் 40 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மாற்று வேட்பாளர்கள், மனு சரியில்லாத வேட்பாளர்கள் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, திமுகவின் ஜவஹர் சூரியக்குமார், மதிமுகவின் சதன் திருமலைக்குமார், தேமுதிகவின் முத்துக்குமார் உள்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 27 மனுக்கள் தள்ளுபடியாகின.
ஏற்கப்பட்ட 13 மனுக்களில் 7 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆவர். மற்ற 6 பேரும் சுயேச்சைகள்.
மனுக்களை வாபஸ் பெற வரும் 3ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு ஏற்கப்பட்டோரின் விவரம்
முத்துச்செல்வி -அதிமுக, ஜவஹர் சூரியக்குமார்-திமுக, சதன் திருமலைக்குமார்-மதிமுக, முத்துக்குமார்-தேமுதிக, நாகேஸ்வரரா ராவ்-சமாஜ்வாடி, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி-கணேசன், பாஜக-முருகன்.
சுயேச்சைகள் - ஆறுமுகம், வெள்ளைத்துரை, அய்யனு, பெருமாள், உடையார், சங்கர்.
நிராகரிக்கப்பட்ட 'விஐபிக்கள்'
நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் சுப்புலட்சுமி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராஜபாளையம் மன்மதன், தேர்தல் மன்னன் பத்மராஜன்.












Click it and Unblock the Notifications