2-ம் கட்ட பிரச்சாரம்- சங்கரன்கோவில் நகரத்தில் நாளை வைகோ வாக்குசேகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து அக்கட்சிப் பொதுச்செயலாளர் நாளை முதல் 2-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
கடந்த 27ந் தேதி முதல் குருவிகுளம் ஒன்றிய பகுதிகளில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். இடையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனை தொடர்பான வழக்கிற்காக தற்போது வைகோ டெல்லி சென்றுள்ளார்.
நாளை காலை அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய குருவிகுளம் ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலை 3 மணி முதல் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
அரசியல் தலைவர்களிலேயே வைகோ மட்டுமே வரும் 16-ந் தேதி வரை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.












Click it and Unblock the Notifications