கருணாநிதி கூட்டத்துக்கு ரிசர்வ் செய்த திமுகவால் தெருமுனைப் பிரசாரத்திற்குத் தள்ளப்பட்டார் ஜெ.

இந்த வடக்கு ரதி வீதிக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்ற கேள்வி எழலாம். காரணம் இருக்கிறது. வடக்கு ரத வீதியில் கூட்டம் போடும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது இந்தப் பகுதி அரசியல் கட்சியினரின் ஐதீகம். எனவேதான் வடக்கு ரத வீதியில் கூட்டம் போட கட்சியினர் மத்தியில் போட்டி மூளும். இந்தப் போட்டியில்தான் நாத்திகர்களின் கட்சியாக கருதப்படும் திமுக முந்திக் கொண்டு இடத்தைப் பிடித்து விட்டது. இதனால் ஆத்திக கட்சியான அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இத்தனைக்கும் தெற்கு ரத வீதிதான் விசாலமானது, பெரியது. வடக்கு ரத வீதி சற்று குறுகலானது. இருப்பினும் சென்டிமென்ட்படி வடக்கு ரதி வீதியைத்தான் அரசியல்வாதிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே முதல் வேலையாக வடக்கு ரத வீதியை போலீஸாரிடம் சொல்லி புக் செய்து விட்டது திமுக. இருந்தாலும், நாங்கள் கேட்டால் இடத்தைத் தர வேண்டும் என காவல்துறை நிபந்தனை போட்டதாம். இதனால் வெகுண்ட திமுகவினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை தர வேண்டும் என்றுகாவல்துறைக்குகூறி விட்டது. இதனால் வடக்கு ரத வீதி திமுகவுக்கு கிடைத்து விட்டது.
இதனால் தற்போது அதிமுகவுக்கு குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாரக் கூட்டம் போட்டுப் பேச இடமில்லாமல் போய் விட்டதாம். வடக்கு ரத வீதியை விட்டால், கிழக்கு ரதி வீதியில்தான் பிரசாரக் கூட்டம் போட அனுமதிக்கப்படும். அதுவும் இடம் குறுகலாக இருப்பதால் தெரு முனைப் பிரசாரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே அந்த இடத்தில்தான் தற்போது ஜெயலலிதா தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
திமுக கூட்டம் 15ம் தேதிதானே நடக்கிறது. ஜெயலலிதா 13 அல்லது 14 சங்கரன்கோவில் வந்து விடுவார். அன்றைய தினத்தில் நடத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு முதல் நாள் முக்கியத் தலைவர் கூட்டத்தை நடத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேர்தல் ஆணையம் அதை அனுமதிக்காது என்று கருதப்படுகிறது. எனவே ஜெயலலிதாவுக்கு வடக்கு ரத வீதி இல்லை என்பதே இப்போதைய நிலைமை.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2011 வரை இத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் அதிமுகவின் கருப்பசாமி. அந்தத் தேர்தல்களில் எல்லாம் வடக்கு ரத வீதியில் அதிமுகதான் கூட்டம் போட்டுப் பேசியுள்ளது. எனவே சென்டிமென்ட்படி இந்த இடத்தை நழுவ விட்டதை அதிமுகவினர் அபசகுனமாக கருதுகின்றனர்.
அதை விட முக்கியமாக வடக்கு ரத வீதியில் பிரசாரம் செய்ய முடியாது என்று ஜெயலலிதாவிடம் எப்படிக் கூறுவது என்ற குழப்பமும், அச்சமும் அதிமுகவினரிடம் உள்ளது. இதைக் கூட பிடிக்க முடியலையா என்று அவர் கோபம் கொண்டு விட்டால் என்ன செய்வது என்பதுதான் அவர்களின் பயத்திற்குக் காரணமாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications