சிங்களர்களை தண்டிக்க ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும்: வைகோ
சென்னை: தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஜெனீவாவில் தமிழர்கள் திரள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்கள் ஜெனீவாவில் பேரணி நடத்துகிறார்கள். தாயகம் விடுதலைக்காக மாவீரர்கள் சிந்திய ரத்தம், உயிருக்கு பூபாளம் இசைக்கட்டும், ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் நீதியின் குரல் வெல்லட்டும், ஜெனீவா நகரில் பொங்குமாங் கடலாய் தமிழர் திரண்டு அகிலத்தின் செவியெல்லாம் கேட்க எழுப்ப இருக்கும் விடியல் அது.
தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை சர்தேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐ.நா. மன்றம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிங்கள சிறையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழர் தாயத்தில் இருந்து சிங்கள ராணுவமும், போலீசும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற கேரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடக்கிறது.
எட்டுத் திசைகளில் இருந்தும் ஈழத்திற்கு கட்டியம் கூற ஜெனீவாவிற்க்கு செல்லுங்கள், ஜெனீவாவில் வீர முழக்கம் மனித குலத்தின் மனசாட்சி கதவை ஓங்கி தட்டப் போகிறது. துடிக்க துடிக்க தமிழினத்தை படுகொலை செய்த சிங்களரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். சுதந்திர தமிழ் ஈழ விடுதலை கொடியை ஏற்றுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications