மாலத்தீவில் தொடரும் குழப்பம்- அனைத்துக் கட்சி குழுவிலிருந்து முக்கிய கட்சி விலகல்
மாலே: மாலத்தீவில் இயல்புநிலை திரும்புவதற்காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து அந்நாட்டின் 2-வது பெரிய கட்சியான டி.ஆர்.பி. விலகுவதாக அறிவித்துள்ளது.
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தின் சகோதரர் உட்பட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று ரகளையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்முடிவை அக்கட்சி மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நஷீத்தின் கட்சி அனுமதித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் குழுவில் தமது கட்சி இடம்பெறும் என்று டி.ஆர்.பி.யின் துணைத் தலைவரும் தற்போதைய அதிபர் வகீத் அரசில் அமைச்சராகவும் உள்ள அகமது முகமது தெரிவித்துள்ளார்.
புதிய அதிபரான வகீத் பதவி விலக வேண்டும் என்பது நஷீத் கட்சியின் கோரிக்கை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் அதிபரை உள்ளே விடாமலும் அவர்களது இருக்கைகளை அப்புறப்படுத்தியும் நஷீத்தின் சகோதரர் தலைமையில் பெரும் ரகளை நடந்தது. உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நஷீத் கட்சி வலியுறுத்தி வருகிறது.
மாலத்தீவில் அமைதியை கொண்டுவருவதில் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications