பெங்களூர் நீதிமன்றத்தில் மழுப்பி வரும் சசிகலா... போயஸ் தோட்ட மதிப்பும் தெரியாதாம்!

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், முக்கிய கட்டமாக, சொத்துகள் குறித்து நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
சொத்தின் மதிப்பீடு குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு, தமக்கு எதுவும் தெரியாது, என்று சசிகலா, மழுப்பலான பதிலையே தெரிவித்தார்.
கேள்வி பதில் விவரம் வருமாறு:
கேள்வி: ஈக்காட்டு தாங்கலில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது தெரியுமா?
பதில்: ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது. கட்டடம் யாருடையது என்றுகூட தெரியாமல், மதிப்பீடு செய்தது தவறு.
கேள்வி: சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?
பதில்: தெரியாது.
மேலும் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் கட்டடம், நீலாங்கரை ராஜா நகரிலுள்ள பிளாட்கள், ஈ.வி.கே., தொழிற்பேட்டையில் உள்ள நான்கு ஷெட்கள், தி.நகர், பத்மநாபநகரில் உள்ள வீடுகள், வேல்ஸ் கார்டன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள பிளாட்கள், சென்னை நந்தனம் பகுதியில் வாங்கிய சொத்துகள், சாந்தோம் ஆர்.ஆர்.நகரில் வாங்கிய சொத்துகளின் மதிப்பு உட்பட சென்னையில் பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது.
இதற்கு சசிகலா, மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் எதுவும் கேட்கவில்லை என்றும், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும் பதிலளித்தார். இதுவரை ஐந்து நாள் விசாரணையில் மொத்தம், 286 கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டுள்ளது.
இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது.
விசாரணை முடிந்து சசிகலா, இளவரசி தனியாக ஒரு காரில் புறப்பட்டு பெங்களூருவில் தாங்கள் தங்கியுள்ள கேபிட்டல் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றனர். விசாரணையின்போது, சசிகலா பதிலளிக்க, நீதிபதி அதிக நேரம் கொடுப்பதில்லை என அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
சுதாகரன் மாதக் கணக்கில் பெங்களூருவில் தங்கவுள்ளதால், சிவாஜிநகர் பாலே குந்திரி சர்க்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் அருகேயுள்ள, "குயின்ஸ் பாரடைஸ்' என்ற அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications