கொலவெறி இத்தாலியரை படம் எடுக்க வந்த இத்தாலி தொலைகாட்சி குழு
கொல்லம்(கேரளா); தமிழக மீனவர்கள் 2 பேரை படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கை பதிவு செய்வதற்காக கொல்லம் நீதிமன்றத்தில் முகாமிட்டிருந்த அந்நாட்டின் சேனல் 5 என்ற தொலைக்காட்சிவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு கொல்லம் ஜே.எம். நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலைசெய்த 2 இத்தாலிய பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரது காவலையும் வரும் 5-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டனர்.
இவர்கள் இருவரையும் படம்பிடிக்க இத்தாலியின் சேனல் 5 என்ற தொலைக்காட்சியின் செய்தியாளரும் கேமராமேனும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். இதையடுத்து சேனல் 5 ஊடகவியலாளர்களிடம் கொல்லம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கொல்லம் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இத்தாலி வீரர்கள் போலி கையெழுத்து போட்டுள்ளதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications