இடைத்தேர்தலுக்குப் பின் அமைச்சர்கள் பதவி தப்புமா?- அழகிரி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிவுக்கு பின் 32 அமைச்சர்கள் இன்னாள் அமைச்சர்களா..?முன்னாள் அமைச்சர்களா...? என்பது தெரியும் என மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான அழகிரி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரசாரம் திருப்தி அளிக்கிறது. சென்னையில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கூறியது போல் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணியாற்ற தமிழகத்தில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அடங்கிய குழுவினர் பிரசாரத்திற்கு வந்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் வருகிறார். 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை பிரசாரத்திற்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வரும் 8ம் தேதி பிரசாரத்திற்கு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரசாரத்திற்கு வருகின்றனர். மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் பிரசாரத்திற்கு அழைத்துள்ளோம். எங்கள் வேட்பாளார் ஜவகர் சூரியகுமார் நிச்சயம் வெற்றி பெறுவார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு இன்னாள் அமைச்சர்களா, முன்னாள் அமைச்சர்களா என்பது தெரியவரும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+