நான் மறுபடியும் அதிமுகவில் சேரப் போகிறேன்... எஸ்.வி.சேகர் அறிவிப்பு

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர் எஸ்.வி.சேகர். பின்னர் அதிமுகவுக்கு வந்தார். அங்கு வந்த பின்னர் அவருக்கு ஏற்றம் கிடைத்தது. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத எம்எல்ஏ பதவி அவருக்கு அதிமுக புண்ணியத்தால் கிடைத்தது. மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சும்மா சொல்லக் கூடாது, ஒரு அரசியல்வாதியாக அவர் எப்படி செயல்பட்டாரோ, ஆனால் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக நன்றாகவே செயல்பட்டார்.
பின்னர் சசிகலா குடும்பத்தினரிடம் நீக்குப் போக்காக நடந்து கொள்ள மறுத்ததால் கட்சிக்குள் ஓரம் கட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் திமுகவுடன் நெருக்கம் காட்டியதால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அவருடன் அனிதா ராதாகிருஷ்ணனையும் சேர்த்து நீக்கினார் ஜெயலலிதா.
சமீபத்தில் இயக்குநர் பாக்யராஜும், எஸ்.வி.சேகரும் மீண்டும் அதிமுகவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதை பாக்யராஜ் உடனடியாக மறுத்தார். ஆனால் சேகர் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் செய்தியாளர்களிடம் எஸ்.வி.சேகர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. நான் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்து கழக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன். எனவே அவரது நல்லாசியுடன் நான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர உள்ளேன்.
அரசியல் வாழ்க்கையே அ.தி.மு.க.வில் சேர்ந்த பின் எனக்கு முதல்வரால்தான் கிடைத்தது. பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை சிலரால் ஏற்பட்டது என்றார் அவர்.
சசிகலாவை ஜெயலலிதா நீக்கியதை முதலில் வரவேற்றவர் எஸ்.வி.சேகர்தான். சசிப் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications