ரயில் கட்டணத்தை உயர்த்த எம்.பி.க்கள் கோரிக்கை!

இந்தியன் ரயில்வே கூட்டம் நேற்று நடந்தது. இதில் ரயில் கட்டணத்தை உயர்த்துமாறு லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் எரிபொருள், மின்சாரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் அதை சரிகட்ட ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும். நல்ல வசதி உள்ள ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய பயணிகள் விரும்புகின்றனர். அதனால் கூடுதல் கட்டணம் கொடுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். ரயில்வேத் துறை சந்தித்து வரும் இழப்புகளை சரிகட்ட இந்த கட்டண உயர்வு அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி பலமுறை பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-10ம் ஆண்டில் ரயில்வேத் துறைக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.












Click it and Unblock the Notifications