இடைத்தேர்தல்: ஜெ.வின் சூறாவளிப் பிரச்சாரத்தை தொடர்ந்து கருணாநிதி பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வரும் 15ம் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கருணாநிதி வரும் 15ம் தேதி சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். சூரியகுமாரை ஆதரித்து திமுக முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி வரும் 15ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் அவர் தொடர்ந்து நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோர மக்களிடம் காரில் இருந்தபடியே ஆதரவு திரட்டுகிறார்.

அன்று இரவில் வடக்கு ரத வீதி, மேல ரத வீதி சந்திப்பில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

முந்தைய நாளான 14ம் தேதி தான் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து சங்கரன்கோவிலில் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+