5 மாநிலத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடம் கூட தேறவில்லை
டெல்லி: 5 மாநிலத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது தோழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது யார் என்றால்அது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். ஐந்து மாநிலங்களிலும் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான இடங்களில் இவர்களின் வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர்.
அதேபோல உ.பியில் ஆட்சியை நழுவ விட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை உத்தரகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் போட்டியிட்டது. அதில் 3 மாநிலங்களில் இக்கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை.
இதனால் தேசிய அளவில் பெரிய கட்சியாக மாற நினைத்த அதன் கனவு வீணாகியுள்ளது.












Click it and Unblock the Notifications