லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததால் காங்கிரஸ் தோற்றது: அன்னா குழுவினர்

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞசாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மணிப்பூரில் மட்டும் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்ததால் அங்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று நினைத்த அக்கட்சிக்கு பரிசாகக் கிடைத்தது தோல்வி மட்டுமே.
இந்நிலையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததற்காகத் தான் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதாக அன்னா குழுவினர் தெரிவி்ததுள்ளனர்.
இது குறித்து அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
லோக்பால் மசோதாவை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிரான இயக்கத்தையே அழிக்கப் பார்த்தது. சிபிஐ அமைப்பை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு உத்தர பிரதேசத்தில் சில முக்கிய தலைவர்களை அக்கட்சி மிரட்டியுள்ளது. அதற்கெல்லாம் சேர்த்து மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் என்று தெரிவி்ததுள்ளார்.
அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்தும் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த முறை காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications