சங்கரன்கோவில்: அதிமுக வேட்பாளரும் வாக்காளர் காலில் விழ ஆரம்பித்தார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில், திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரும் வேட்பாளர்கள் காலில் விழுந்து ஆதரவு கேட்கின்றனர். அதிலும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் யாரைப் பார்த்தாலும் காலில் விழுந்து விடுகிறார்.
இதுவரை யார் காலிலும் விழாமல் இருந்த அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியும் தற்போது வாக்காளர்கள் காலில் விழ ஆரம்பித்துள்ளார். மற்றவர்கள் விழுகிறார்களே, நாம் மட்டும் விழாமல் இருக்கிறோமே, இதனால் வாக்குகள் வழி மாறிப் போய்டுமோ என்ற பயத்தால் அவரும் விழ ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
வன்னிகோனேந்தல் பகுதியில் மேசியாபுரம், அடைக்கலாபுரம், தேவர்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி தீவிர வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் யூனியன் தலைவர் ஜெகதீஸ், துணை தலைவர் லெரின்ஸ், கவுன்சிலர்கள் அருண்புனிதன், முருகன், சுப்பையா, பாலன், ஒன்றிய் பொருளாளர் துரைசாமி, ஊராட்சி செயலாளர்கள் இசக்கியப்பன், சந்திரன், சந்திரசேகர், கூடன்குளம் ஜெயலிலதா பேரவை செயலாளர் சுரேஷ்குமார், ஓட்டுனர் சங்க பொருளாளர் செல்வம், ஒன்றிய மாணவரணி தலைவர் பூமாலை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் செளந்திரராஜன், கணேசன், மாரியப்பன், நாட்டமை விஜய், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மகேஸ்வரன் உள்பட பலர் உடன் சென்றனர்.
அவ்வாறு வாக்கு சேகரிக்கச் சென்றபோது முத்துசெல்வி வாக்காளர்கள் காலில் விழுந்து ஆதரவு கேட்டார்.












Click it and Unblock the Notifications