தானே புயல் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.140.39 நன்கொடை
சென்னை: தானே புயல் நிவாரண நிதிக்கு ரூ.140.39 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தை தாக்கிய தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று தலைமை செயலகத்தில் பலரும் நிதியுதவி வழங்கினர்.
எச்.சி.எல். டெக்னாலஜி நிறுவனம், மோகன் ப்ரூரிவரிஸ் மற்றும் டிஸ்டலரிஸ் நிறுவனம், கரூர் வைஸ்யா வங்கி, பி.எஸ்.ஜி. மற்றும் சன்ஸ் அறக்கட்டளை ஆகியவை சார்பில் நேற்று மட்டும் ரூ.4 கோடியே 14 லட்சத்து 25 ஆயிரத்து 900 நிதியுதவி வழங்கப்பட்டது.
தானே' புயல் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.140 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 745 முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications