ஏப்ரல் 6 முதல் 30 வரை நெல்லை- மதுரை- பெங்களூர்- மைசூர் சிறப்பு ரயில்
சென்னை: கோடை விடுமுறை காலத்தையொட்டி திருநெல்வேலி- மைசூர் இடையே மதுரை, பெங்களூர் வழியாக ஏப்ரல் 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து மைசூருக்கும், மைசூரில் இருந்து திருநெல்வேலிக்கும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து மைசூருக்கு 6-4-2012 முதல் 29-6-2012 வரை வெள்ளிக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண்- 06040) இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு மைசூரை சென்றடையும்.
இதேபோல மைசூரில் இருந்து திருநெல்வேலிக்கு 7-4-2012 முதல் 30-6-2012 வரை சனிக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்- 06039) இயக்கப்படுகிறது. மைசூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த ரயில்கள் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், மாண்டியா இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications