அடுத்த உ.பி. முதல்வர் யார் என்பது நாளை தெரியும்-முலாயம் சிங் யாதவ்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யார் என்பது நாளை தெரியும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்ட முலாயமின் மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக மாட்டாரா என்று கட்சியினரும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
சிவப்பு தொப்பி அணிந்து சமாஜ்வாடி கட்சியின் சின்னமான சைக்கிளில் அகிலேஷ் பிரச்சாரம் செய்தது இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. சமாஜ்வாடி வெற்றி பெற்றதற்கு அகிலேஷ் தான் காரணம் என்று கட்சியினர் கருதுகின்றனர். ஆனால் 38 வயதே ஆகும் அவர் எப்படி மாநிலத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும் மூத்த தலைவர்கள் நினைக்கின்றனர். இதற்கிடையே முலாயம் சிங் யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று அகிலேஷ் அறிவி்ததுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முலாயம் சிங் யாதவ் கூறியதாவது,
வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடக்கிறது. அதில் உத்தர பிரதேசத்தின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும். முதல்வரைத் தேர்ந்தெடுத்தவுடன் பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications