திமுக ஆட்சியில் 12 சதவீதமாக இருந்த கமிஷன் அதிமுக ஆட்சியில் 20 சதவீதமாக உயர்வு- வைகோ

சங்கரன்கோவிலில் மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்து பேசுகையில், சங்கரன்கோவில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. களத்தில் எல்லாக் குதிரைகளும் ஓடுகின்றன.
திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து தவறான ஒரு முன்னுதாரணத்தை திமுகவினர் ஏற்படுத்தினர். அதே போல் திருமங்கலம் பார்முலாவை சங்கரன்கோவில் தேர்தலிலும் புகுத்த அதிமுகவினர் நினைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்த தேர்தலில் பண பலத்தை முறியடிக்க வேண்டும். கோடி கோடியாக பணம் செலவழித்து வெற்றிபெறுவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மாட்டார்கள்.
திமுக ஆட்சியில் காண்ட்ராக்ட்களுக்கு 12 சதவீதம் கமிஷன் பெற்றனர். அதிமுக ஆட்சியில் அது 15 முதல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஆற்றில் மணல் அள்ள முடியாது. இதனால் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரள மாநிலத்திற்கு மணல் கடத்தப்படுகிறது. இந்த மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நீடித்தால், நம் இயற்கை வளங்களெல்லாம் அழிந்து தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.
தமிழனுக்கு ஒரு துன்பம் என்றால் அதற்காக போராடுபவர்கள் மதிமுகவினர்தான். உலகத்தின் எந்த ஒரு மூலையில் தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.
தேர்தல் அறிவித்தவுடன் 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு எந்த அமைச்சராவது வந்து மக்களிடம் குறை கேட்டார்களா? எந்த மக்களுக்காவது உதவி செய்துள்ளனரா? 16ம் தேதிக்கு பிறகு எந்த அமைச்சரும் சங்கரன்கோவிலில் இருக்க மாட்டார்கள்.
இந்த ஆட்சியில் பால், பஸ் கட்டணம், விலைவாசி என அனைத்தும் உயர்ந்துள்ளது. மின்வெட்டால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்கட்டணம் உயரப் போகிறது.
இந்த ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை செய்யுங்கள். மதிமுவுக்கு புதிய பாதையை உருவாக்க சமிக்ஞை காட்டுங்கள். அரசியலில் ஒரு திருப்பத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்த மதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்.
சட்டசபையில் அதிமுக, திமுக, தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வயிறு பசிக்கிறவர்களுக்குதான் சாப்பாடு போடவேண்டும். எங்களுக்கு சோறு (ஓட்டு) போடுகிற மக்களுக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன். இந்த தேர்தலில் அதிமுக ஜெயித்தால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவது இல்லை. ஏற்கனவே மெஜாரிட்டி இருக்கும் நிலையில் கூடுதலாக ஒருவர் ஜெயித்து ஆகப்போவது ஒன்றும் இல்லை. மதிமுகவை ஜெயிக்க வைத்தால் மக்கள் பிரச்னைகளுக்காக அவர் சட்டசபையில் குரல் கொடுப்பார்.
இந்தத் தேர்தலில் மதிமுகவை வெற்றிபெறச் செய்து அதிமுக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கவேண்டும் என்றார் வைகோ.
அதிமுக கவுன்சிலர் மரணம்-பிரசாரத்தை நிறுத்திய வைகோ:
இந் நிலையில் சங்கரன்கோவில் நகராட்சி, 30வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஆறுமுகப்பாண்டியன் உடல் நலம் சரியில்லாமல் நேற்று இறந்தார். அவரது சொந்த ஊரில் நேற்று மாலை வைகோ பிரசாரம் செய்ய வந்தார். ஆறுமுகப்பாண்டியனின் உடல் வருவதைப் பார்த்த வைகோ பிரசாரத்தை நிறுத்திவிட்டு கிளம்பி விட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications