நாடாளுமன்றத்தில் கருப்புப் பண விவகாரம் எதிரொலிக்கும் : அத்வானி

இது தொடர்பாக எல்.கே.அத்வானி கூறியதாவது:
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் கருப்புப் பண விவகாரமே பிரதானமாக இருக்கும். இந்த விவகாரத்தை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை எதிர்க்கட்சிகள் பார்க்கத்தான் இருக்கின்றன.
இந்தக் கூட்டத் தொடரில் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய உள்லதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்திருந்தார்.
தற்போதைய கூட்டத் தொடரில் அத்தகைய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வாரா இல்லையா? என்பது எமக்குத் தெரியாது. ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இந்த விவகாரத்தை அணுக உள்ளோம்.
மாநிலங்களவையில் லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிச்சயமாக அவையில் இதை கொண்டுவர வேண்டும்.
மாநிலங்களின் அனுமதியின்றி பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பும் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications