பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. நகராட்சித்தலைவர் மாரடைப்பால் மரணம்!
Subscribe to Oneindia Tamil

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. முக்கிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. இன்று அரக்கோணம் தி.மு.க. நகராட்சித் தலைவர் மனோகரன் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார்.
கொலகட்டாக்குறி்ச்சி பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனக்கு கொண்டு செல்லும் முன் இறந்தார்.
மரணமடைந்த மனோகரனுக்கு வயது 55 ஆகும். இவரது திடீர் மரணத்தால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications