லட்சிய திமுகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது- விஜய டி.ராஜேந்தர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த விஜய டி.ராஜேந்தர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், எந்த கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின் வெட்டிற்கு, கடந்த கால தி.மு.க. ஆட்சியே காரணம்.
கடந்த ஆட்சியில், மின் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் மின் உற்பத்தியை அதிகரிக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டனர். இந்தியாவில் பல இடங்களில் அணு மின் நிலையங்கள் உள்ளன. அங்கெல்லாம் எவ்வித பாதிப்பும் இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் போது, மத்திய அமைச் சரவை யிலிருந்து வெளியேறாமல், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென, மத்திய அரசை கேட்க, கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரளாவில் ஆளும் காங்கிரஸ் அரசை, மத்திய அரசு கண்டு கொள்ளாமல், தென் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications