சங்கரன்கோவில் பிரசாரத்தின்போது சரத்குமார் சொன்ன உளி கதை

கூட்டத்தில் சரத்குமார் பேசியது இதுதான்...
பெண்களின் வாழ்வில் வழிகாட்டி நமது முதல்வர். அதனால் தான் முத்துச்செல்வியை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். முத்துச்செல்வி படித்தவர், பண்பாளர் அதனால் உங்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து அமோக வெற்றியினை தாருங்கள்.
தாய்மார்களுக்காக தாலிக்கு தங்கம் தந்தவர் முதல்வர். குடும்பத்தில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து கறவைமாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் கல்வி பயிலும் மாணவ மாணவர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள் போன்றவற்றை வாரி கொடுத்துள்ளார்.
இப்படி தாய்மார்களும், மாணவர்களும் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து, தமிழக மக்களின் நலனில் அக்கரை கொண்டு இரவு பகல் பாராமல் அயராது உழைத்து தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி வருகிறார். எனவே, தொலைநோக்குப் பார்வையுள்ள முதல்வரின் காலடியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியை நாம் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு கதையை இத் தருணத்தில் சொல்ல விரும்புகின்றேன்.
ஒரு சிற்பி ஒரு மலையை சின்ன உளியால் உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், அய்யா என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த சிற்பி சொன்னார். இந்த மலையை கடக்க மூன்று நாட்கள் ஆகிறது. அதனால் இந்த மலையை குடைந்து ரோடு போட்டால் அரை மணி நேரத்தில் அடுத்த ஊரை சென்றடையலாம் என்றார்.
அதற்கு வழிப்போக்கன் சொன்னான், இந்த பணி முடியும் தருவாயில் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றான்.
சிற்பி சொன்னார், என் காலம் முடிவதைப் பற்றி கவலைப்படவில்லை. என் எதிர்கால சந்ததியினர் இதை அனுபவிக்க வேண்டும். பயனடைய வேண்டும் என்றார்.
அதைப் போல் தான் நம் முதல்வர் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பற்றி சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார். அவரை முதல்வராக பெற்றதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications