பலம் வாய்ந்த கட்சிகளுக்கு மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம்: வைகோ
மதுரை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மத்தியில் நிராயுதபாணியாக போட்டியிடுகின்றோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவையில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. அதைவிட தொண்டரின் திருமணம் முக்கியம் என்பதால் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. தேர்வுக்குப் படிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தடையில்லா மின்சாரம் கிடைக்க தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்து மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உயிர்மூச்சு உள்ளவரை போராடுவேன். ஆனால் கேரள அரசு அணையை உடைக்க நினைக்கிறது. தமிழகமின்றி கேரளா வாழ முடியாது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலம் போன்ற பலம் வாய்ந்த கட்சிகள் மத்தியில் தொண்டர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள மதிமுக நிராயுதபாணியாக போட்டியிடுகிறது. தொகுதி மக்கள் எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகாது என்றார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications