மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் குறைந்துவிட்டன: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் 2011-ம் ஆண்டில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் பெருமளவு குறைந்துவிட்டன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

2010-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 625. 2011-ல் 465 சம்பவங்கள்தான் நிகழ்ந்துள்ளன.

ஒரிசாவில் 2010-ல் 218 சம்பவங்களும் 2011-ல் 192 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அதே நேரத்தில் ஜார்க்கண்ட்டில் கடந்த 2010-ம் ஆண்டைவிட கூடுதல் தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பாலியல் வன்முறை மாவோயிஸ்டுகள்

ஒரிசா, மராட்டியம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் சரணடைந்த பெண் மாவோயிஸ்டுகள் தெரிவித்த தகவல்களின்படி, பெண் போராளிகல் மீதான பாலியல் வன்முறைகளை அதிகளவில் மாவோயிஸ்டு தலைவர்கள் நிகழ்த்துகின்றனர்.

ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் நக்சல்களின் மறைவிடங்களிலிருந்து கருத்தரிப்பு சோதனை உபகரணங்கள், ஆணுறைகள் கைப்பற்றப்பட்டது இதற்கு சாட்சியாகும்.

கருத்தரிக்கும் பெண் போராளிகளை கட்டாய கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகளிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபடுகின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+