நான் ராஜினாமா செய்யவில்லை- திரிவேதி; நாடாளுமன்றத்தில் பெரும் அமளி

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. அப்படி வந்த செய்தி தவறு. அதேசமயம், மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ உத்தரவிட்டால் நான் விலகத் தயாராகவே உள்ளேன்.
எனது கடமையிலிருந்து நான் விலக மாட்டேன். கட்சியை விட நாடுதான் எனக்கு முக்கியம். நான் விலக வேண்டும் என்று மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ என்னிடம் கூறவில்லை. அப்படி கூறினால் அடுத்த நிமிடமே நான் விலகி விடுவேன்.
எனது பட்ஜெட்டில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ரயில்வே மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பயணிகள் கட்டணத்தை உயர்த்தினேன்.
நான் கட்சியின் கட்டுப்பான தொண்டன். எனது தலைவர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பேன் என்றார் திரிவேதி.
நாடாளுமன்றத்தில் அமளி
இதற்கிடையே, திரிவேதியின் பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கினர். இதனால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
மமதாவை சமாதானப்படுத்த காங். முயற்சி
இந்த நிலையில், மமதா பானர்ஜியை சமாதானப்படுத்த காங்கிரஸ் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இந்த சமாதான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை மமதா பானர்ஜி பொறுமை காக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications