மமதாவின் எதிர்ப்பால் பதவி விலகினார் தினேஷ் திரிவேதி-ரயில்வே அமைச்சராகிறார் முகுல் ராய்
டெல்லி: பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதால் தனது கட்சித் தலைவர் மமதா பானர்ஜியின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதை ஏற்பதாக பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய ரயில்வே அமைச்சராக திரினமூல் காங்கிரஸின் முகுல் ராய் பதவியேற்கவுள்ளார்.
தற்போது முகுல் ராய் டெல்லி விரைகிறார். அவரது தலைமையில் திரினமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் ரயில்வே கட்டண உயர்வை எதிர்த்து இன்று தர்ணாப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
ஆனால் பயணிகள் கட்டண உயர்வை முழுமையாக் திரும்பப் பெறும் சாத்தியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.
திரினமூ்ல் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கிறார் ராய். மமதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். ஏற்கனவே ரயில்வே இணை அமைச்சராக இருந்தவர்தான் இந்த ராய். அப்போதுதான் குவஹாத்தியில், இரு பெரும் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டன என்பது நினைவிருக்கலாம். இவர் கப்பல்துறை இணை அமைச்சராக இருந்தபோது டெல்லியை விட கொல்கத்தாவில்தான் முக்கால்வாசி நேரம் குடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications