இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்படாது- சொல்கிறார் சு.சாமி

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே ஒன்று திரண்டு கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் வழி தனி வழி என்பது போல சுப்பிரமணியசாமி இப்படிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது. ஏனெனில் அத்தீர்மானத்தில் விடுதலைப் புலிகள் செய்த கொலைகள் மற்றும் கற்பழிப்புகள் பற்றி எதுவும் சொல்லப்படவிலை.
அப்பாவி சிங்களர்கள், தமிழர்கள் உள்பட பலர் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்படனர். ஆகவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமர் ஆதரிக்கக் கூடாது.
ஆனால் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு, உரிமைகளும், அதிகாரங்களும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்படி செய்ய அதிபர் ராஜபக்சேவை வலியுறுத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார் சாமி.












Click it and Unblock the Notifications