திருப்பதி கோயில் உண்டியலில் பணம், வெள்ளிப் பொருட்கள் திருடிய ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் இருந்து பணம், வெள்ளிப் பொருட்கள் திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ் பெற்றது. அங்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் உண்டியலில் பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியலில் கிடைக்கும் பணம், பொருட்கள், நகை ஆகியவை தேவஸ்தான பாதுகாப்பில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்படும்.

உண்டியல் வசூலை கோவில் ஊழியர் கிரிதர் என்பவர் திருப்பதியில் உள்ள தேவஸ்தான பெட்டகத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அவர் அமெரிக்க டாலர்கள், வெள்ளிப் பொருட்களைத் திருடி தனது ஆடையில் மறைத்து வைத்துக் கொண்டார். காணிக்கை வசூலை பெட்டக்த்தில் வைத்துவிட்டு வெளியே வந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவர் அமெரிக்க டாலர்கள், வெள்ளிப் பொருட்கள் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் கிரிதரை கைது பணம், பொருட்களை மீட்டனர். இதையடுத்து அவரை தேவஸ்தான அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+