பேச்சுவார்த்தையே கிடையாது... முதல்வராக்காவிட்டால் பிளவு நிச்சயம்: எடியூரப்பா ஆதரவாளர்கள் உறுதி

பெங்களூர் புறநகர் ஒன்றில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எடியூரப்பா 67 எம்.எல்.ஏக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடக சட்டப்பேரவயில் பாஜகவுக்கு 120 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
10 எம்.பி.க்கள் ராஜினாமா?
இதனிடையே டெல்லியில் முகாமிட்டுள்ள பாஜக எம்.பிக்கள் 10 பேரும் எடியூரப்பாவை முதல்வராக்காவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைமையுடன் நேரில் பேசவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பாஜக தலைவர் நிதின் கட்காரி இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
பேச்சுவார்த்தை நிராகரிப்பு
தற்போது நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் உள்ள நிதின் கட்காரி தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுத்த அழைப்பையும் எடியூரப்பா நிராகரித்துவிட்டார்.
சதானந்தா கவுடா நிலை
இதனிடையே முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள தற்போதைய முதல்வர் சதான்ந்த கவுடா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எடியூரப்பாவின் போர்க்கொடி குறித்து இன்று கருத்து தெரிவித்த சதானந்தா, நான் என்னுடைய பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறேன். இருப்பினும் பாஜக தலைவர் நிதின் கட்காரி மேற்கொள்ளும் எந்த ஒரு முடிவையும் ஏற்பேன் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications