கூடங்குளத்தில் ஏடிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸார் குவிப்பு!

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக இது நாள் வரை தமிழக அரசு போராட்டக் குழுவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப போராட்டக் குழுவினர் மீது தமிழக அரசு எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆனால் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் எந்தவிதமான சமாதானத்திற்கும் வர மறுத்து வருவதால் தமிழக அரசு எரிச்சலடைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில், அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையையும் உதயக்குமார் நிராகரித்து விட்டார். இதனால் தமிழக அரசு கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அணு மின் நிலையத்தைத் தொடங்க தமிழக அரசு பச்சைக் கொடி காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கேற்ப சமீபத்தில் கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளை திடீரென ஆய்வு செய்தார். இவர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை, போராட்டத்தை பெரும் போலீஸ் பட்டாளத்துடன் சென்று முறியடித்தவர் என்பதால் ஜார்ஜின் வருகை கூடங்குளம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். அவர் போக 10 மாவட்ட எஸ்.பிக்களும் வந்துள்ளனர். பெருமளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கூடங்குளத்தில் ஜார்ஜ் மற்றும் பத்து மாவட்ட எஸ்.பிக்கள், போலீஸாரின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications