கிங்பிஷர் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்தாகலாம்: மத்திய அரசு
டெல்லி: நிதித் தட்டுப்பாடு என்று கூறிக் கொண்டு பயணிகளையும் ஊழியர்களை பாடாய் படுத்தி வரும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங் எச்சரித்துள்ளார்.
எரிபொருளுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு பாக்கி, விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கு தர வேண்டிய பண பாக்கி, ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி, பல்வேறு வரிகள் பாக்கி என விஜய் மல்லையாவின் பாக்கிகள் ஏராளம்.
தனக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும், வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டு காலம் கடத்தி வரும் மல்லையா, தனது சொந்தப் பணத்தை இந்த நிறுவனத்தில் போட முன் வரவில்லை.
இதனால், கிங்பிஷர் நிறுவன விமானங்களின் பராமரிப்பு கூட ஆபத்தான நிலையில் உள்ளது. இந் நிலையில் பாதுகாப்பையும் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு கிங்பிஷர் நிறுவனத்தின் லைசென்ஸை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications