முன்னாள் பெண் போராளிகளுக்கு புலனாய்வுத்துறை பெயரில் மிரட்டல்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பெண் போராளிகளுக்கு இலங்கை புலனாய்வுத்துறை என்ற பெயரில் மிரட்டல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றதில், விடுதலைப்புலிகள் கடும் பின்னடைவை சந்திததனர். இதனால் விடுதலைப்புலிகள் வச் இருந்த பகுதிகள் இலங்கை அரசு வசம் வந்தது. மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பலர் இலங்கை அரசிடம் சரண் அடைந்தனர்..

இவ்வாறு சரண் அடைந்த பெண் போரளிகள் பலர் கிளி நொச்சியில் வசித்துவருகின்றனர். விடுவிக்கப்பட்ட பெண் போராளிகள் சிலருக்கு சிங்கள இராணுவத்தினர் புலனாய்வுத் துறையினர் எனக் கூறி தொலைபேசி வழியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.

கடந்த 16-ந் தேதி இது போன்ற ஒருபுகார் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஒரு முன்னாள் பெண் போராளியுடன் தொடர்பு கொண்ட மர்ம நபர் நாங்கள் நினைத்தால் உம்மைக் கடத்திச் செல்ல முடியும். நீர் இராணுவத்துடனும் போலீசாருன் அநாகரிகமாக நடந்து கொண்டது எமக்குத் தெரியும். நாங்கள் என்ன கேட்டாலும் நீ அதைச் செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளனர். பகல், இரவு என வேறுபாடு இன்றி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கும் நபர் பெயர் நிக்ஸன் என்றும் கூறப்படுகின்றது. 0771067662, 0779237359 ஆகிய இந்த இரண்டு செல் போன் மூலமே மிரட்டல் விடுத்து வருவாதகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+