கூடங்குளத்தில் ஆகஸ்ட்டில் மின் உற்பத்தி துவங்கும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 300 ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். நேற்று காலை ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உள்பட 950 பேர் பணிக்கு சென்றனர். இதையடுத்து இத்தனை நாட்களாக முடங்கிக் கிடந்த பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகின்றன. இரவு, பகலாக பணிகளை முடித்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் மின்உற்பத்தியை துவங்க இந்திய அணு சக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குச் சாதகமான முடிவை தமிழக அரசு எடுத்ததையடுத்து கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீஸாரையும், 3 டி.ஐ.ஜி.க்கள், 10 எஸ்.பி.க்களையும் கொண்டு வந்து கூடங்குளத்தில் குவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை கைது செய்ய சமயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications