எதிர்கட்சிகளின் பாச்சா பலிக்கவில்லை, மக்கள் அம்மா பக்கம்: முத்துசெல்வி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்பதாக வெற்றி பெற்றுள்ள முத்துசெல்வி தெரிவித்தார். மக்கள் முதல்வர் பக்கம் தான் இருக்கின்றனர் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு போட்டியிட்ட திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் டெபாசிட்டை இழந்தன. இந்த வெற்றியின் மூலம் சங்கரன்கோவில் அதிமுகவின் கோட்டை என்பதை அக்கட்சி நிரூபித்துள்ளது. அதிமுகவின் வெற்றியை அக்கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும் கொண்டாடினர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற முத்துசெல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக சமர்பிக்கிறோம். எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தும் அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு மக்கள் முதல்வர் பக்கமே இருக்கின்றனர் என்பதற்கு இந்த வெற்றி ஒரு எடுத்துக்காட்டாகும்.

மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கூறி மக்களை திசை திருப்பப் பார்த்தனர் எதிர்க்கட்சியினர். ஆனால் அதை சங்கரன்கோவில் தொகுதி மக்கள் நிராகரித்து விட்டனர்.

வாக்களித்த மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+