அரசியல் காட்சிகள் மாறுகின்றன, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல்- சுஷ்மா ஆரூடம்

உ.பி. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்தே லோக்சபா தேர்தல் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முக்கியத் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் இதுகுறித்துக் கூறுகையில்,
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வருகின்றன. தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது.
பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு உண்மையிலேயே 227 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 272 எம்.பி.க்களின் பலம் அந்த கூட்டணிக்கு கிடையாது. மத்தியில் மைனாரிட்டி அரசின் ஆட்சி நடந்து வருகிறது.
எனவே, முன்கூட்டியே தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதால், அதை சந்திக்க பாரதீய ஜனதா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
உத்தரகாண்ட் சட்டசபையில் சபாநாயகராகும் வாய்ப்பு பாரதீய ஜனதாவுக்கு இருப்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. அம்மாநில தேர்தலில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மத்திய பிரதேசத்துக்கு வந்ததில் எந்த விசேஷமும் கிடையாது. இங்குள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு வழிபாடு நடத்தவே வந்தனர் என்றார் சுஷ்மா.












Click it and Unblock the Notifications