நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வெறியாட்டம்
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 20 ம் தேதி நாகப்பட்டினம் அக்கரப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு படகில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் அவர்கள் வந்த படகை சேதப்படுத்தி, மீன்பிடி வலைகள், திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி, மீன்வளத்தைக் காட்டும் கருவிகளை பறித்துக் கொண்டு சென்றனர்
இந்தத் தாக்குதல் 23ம் தேதி நடந்ததாகவும், தாங்கள் வழி தெரியாமல் தத்தளித்து இன்று ஒருவழியாக நாகப்பட்டினம் கடற்கரைக்கு வந்ததாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது முதல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லக் கூடாது என்பதை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications