இலங்கையில் சிங்களர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சலுகைகள் - ஜி.கே. வாசன் உறுதி

வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.ஞானசேகரன் மகன் நவீனுக்கும், அ.தி.மு.க., எம்.பி. தம்பித்துரை மகள் லாஸ்யாவுக்கும் சமீபத்தில் திருப்பதி திருமலையில் ரகசியமாக திருமணம் நடந்தது.
இந்த திருமண வரவேற்பு விழா வேலூர் அருகே ரங்காபுரம் கிருஷ்ண மஹாலில்,மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு கண்ணியத்துடனும், நிதானத்துடனும் செயல்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முள் வேலியில் அடைபட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது. சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள இலங்கை தமிழர்களும் விரைவில் கிடைக்கும்.
மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சகமும், அமைச்சர் கிருஷ்ணா-வும் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றனர். இலங்கை தமிழர்கள் பிரச்னையை மத்திய அரசு சிறந்த முறையில் அணுகி வருகின்றது என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications